‘ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி, பண்பாட்டு மானிடவியல் நோக்கில் அமைந்தது. இனவரைவியலே பிரதானம். இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கும் பொழுது, ஜல்லிக்கட்டை காரணமாக வைத்து தமிழர்களின் இனவரைவியலை எழுதப் போவதாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால், எழுத எழுதத் தான், இது தமிழர்களின் இனவரைவியல் என்ற எல்லையையும் கடந்து, காளையின் இனவரைவியலாக திரண்டு வருவதை நான் கண்டு கொண்டேன்.
