சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து வெளியிடப்பட்ட தே என்கிற நாவல் திரு சி முருகன் ஐஏஎஸ் அவர்களால் எழுதப்பட்ட இரண்டாவது நூல்
இந்த நூல் நாவலாக வெளிவந்துள்ளது.இதன் வெளியீட்டு நிகழ்வு நேற்று மிக அழகாக நடந்தது.
மேற்கு வங்க அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி. முருகன் சமீபமாக எஸ் ஐ ஆர் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து அதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களில் வலைதளங்களில் பிரபலமானார்.அவர் ஒரு சிறந்த நேர்மை மிக்க ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல் க கரிசல் இலக்கியத்தில் வேர் பிடித்த ஒரு சிறந்த எழுத்தாளராகவும் பரிமளிக்கிறார் என்பது இந்த வெளியீட்டு நிகழ்வில் நாம் கண்டது…..
இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக
சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன்
- இயக்குனர் வசந்த்
- இயக்குனர் ராஜூமுருகன்
- கவிஞர் வெய்யில்
- எழுத்தாளர் லட்சுமண பெருமாள்
- நக்கீரன் கோபால்
- கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ்
சிவ சண்முகராஜா ஐஏஎஸ்
சிவ சூரியன் ஐஏஎஸ்
நந்தகுமார் ஐ ஏ எஸ் பல ஐபிஎஸ் அதிகாரி கள் மற்றும் டி ஆர் ஓ கள்.

பேராசிரியர்கள் ஏறத்தாழ 250 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த நிகழ்வு அற்புதம் என்றே சொல்வேன்.
– விஸ்வேஸ்வரன் கனகராஜ்
